states

img

மணிப்பூர் போல அருணாச்சலப் பிரதேசத்திலும் வன்முறையை தூண்டும் மோடி அரசு

மணிப்பூர் மாநிலத்தைப் போல, பாஜக ஆளும் மற்றொரு வட கிழக்கு மாநிலமான அருணாச்ச லப் பிரதேசத்திலும் வன்முறையை தூண்டும் வேலையை மோடி அரசு துவங்கியுள்ளது

அருணாச்சலப் பிரதேசத்தின் சீன நாட்டின் எல்லையோரப் பகுதியான சியாங் ஆற்றில் 11,000 மெகாவாட் நீர்மின்சார அணை கட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சியாங் ஆற்றுப் பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களை விரட்டும் வகை யில் துணை ராணுவப் படைகள் (மத்திய ஆயுதக் காவல் படை (CAPF)) குவிக்கப் பட்டுள்ளன. துணை ராணுவப்படை பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால், பழங்குடி மக்கள் தங்களின் இயல்பு நிலையை இழந்து தவித்து வரு கின்றனர்.

பதற்றம்

இந்நிலையில், சியாங் ஆற்றில் நீர்மின்சார அணை திட்டத்தை கண்டித் தும், துணை ராணுவப் படைகளை உட னடியாக அகற்றுமாறு சியாங் மாவட்ட பழங்குடி மக்கள் போராட்டம் தொடர் நடத்தி வருகின்றனர். இதனால் மணிப்பூர் போல அருணாச்சலப் பிரதேசத்திலும் வன்முறை வெடிப்பதற்கான பதற்ற மான சூழல் உருவாகியுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. மேலும் மாநி லத்தின் 109 சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள், “நீர்மின்சார அணை அமைப்பதை நிறுத்தி, துணை ராணுவப் படைகளை வாபஸ் பெற வேண்டும்” என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளன.

பாஜக முதல்வர் மழுப்பல்

“உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்றால் நீர்மின் திட்டத்தை அரசாங்கம் தொடராது” என அருணாச்சல பிரதேச பாஜக முதல்வர் பேமா காண்டு தெரி வித்தார். ஆனால் இவரது ஒப்புதலின் கார ணமாகவே சியாங் ஆறு  நீர்மின் திட்டம் கொண்டுவரப்பட்டது என எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டியுள்ளன.